சி.ல.சு.க மாவட்ட தலைவர்கள் சிலர் மொட்டு கட்சியில் வேட்புமனுவில் ஒப்பமிடவில்லை என்பதாக அறியக்கிடைக்கின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு மேலதிகமாக இன்னுமொருவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது இதனை மொட்டுக் கட்சியின் தலைமைத்துவம் மறுத்துள்ளது.
அதனால் சி.ல.சு.க பொதுச் செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க பொதுஜன பெரமுனவின் செயலாளர் லசன்த அலகியவன்ன சி.ல.சு.க பிரச்சார செயலாளர் வீரகுமார திசாநாயக முன்னால் அமைச்சர்களும் வேட்பு மனுவில் ஒப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.