ஐக்கிய மக்கள சக்தியின்
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க முவந்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்கு வந்த வேலுகுமார் ஜனாதிபதி ரணிலுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் சக்திவாய்ந்த உறுப்பினரான வேலு குமார் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக பாராளுமன்றம் நுழைந்தார்.
அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.