2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு
39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (15) காலை 9 மணிக்கு வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 11 மணியுடன் நிறைவடைந்தது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ஆட்சேபனைகள் எதுவும் வரவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.