1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அநுராதபுரம்-பாதெனிய பிரதான

வீதியின் சந்திக்கு அருகில் இரண்டு பஸ்கள் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பஸ்ஸும் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த விபத்தில், மாணவர்கள் பயணித்த பஸ்ஸிலிருந்த  நான்கு மாணவர்களும்  சாரதியும் மற்றைய பஸ்ஸில் பயணித்த 14 பெண்களும் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
விபத்துடன் தொடர்புடைய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி