1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட கமுனுபுர பகுதியில்  இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

,உயிரிழந்தவர் ஸ்ரீபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களை கண்டுபிடிக்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி