முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி முக்கியஸ்தர்களை அண்மையில் கூட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என வினவியபோது அங்கு ஏகமனதாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தம் சிறிசேனா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆசன அமைப்பாளர்களை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடி அங்கு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த இரு கலந்துரையாடல்களிலும் விஜேதாச ராஜபக்க்ஷ ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் எனவும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தயாசிறி ஜயசேகரவின் செயலாளர் பதவிக்கு இருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து அக்கட்சியின் அமைப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்து அவருடன் இணைந்து செயற்படுவதுடன் அவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.