கிரிக்கெட் வீரர் நிரோஷன்
திக்வெல்லவின் இடைநீக்கம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தடை காலவரையின்றி அமுலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் எல்பிஎல் போட்டியின்போது நடத்திய விசாரணையில் ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டது.
விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கான SLC இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியே இந்த விசாரணை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகாமைத்துவ வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பொருட்களின் செல்வாக்கில் கிரிக்கெட் தொடர்ந்து உள்ளதா என்பதனை உறுதி செய்வதே இதன் நோக்கங்களாகும்.
ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல்களில் இருந்து விளையாட்டைப் பாதுகாப்பதற்காக, இலங்கை கிரிக்கெட், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டுப் போட்டிகளின் போது இந்தச் சோதனைகளை நடத்துகிறது.
தூய்மையான மற்றும் நியாயமான ஆட்டத்திற்கான அர்ப்பணிப்பு இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானது.
சட்டத்தை மீறும் குற்றச்சாட்டுகள் உயர் மட்டத்தில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.