18 வயதான விஷ்மி குணரத்ன
தனது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் சதத்தை இன்று (16) பெற்றுக் கொண்டார்.
பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்த சத்த்தை அடித்தார்.
இதனுடன், விஷ்மி குணரத்ன இலங்கை கிரிக்கெட் வீரர் சமரி அத்தபத்துவைத் தவிர, ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
அயர்லாந்து அணிக்கு எதிராக 101 ரன்கள் குவித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்த இளம் இலங்கை வீரர் என்ற சாதனையில் விஷ்மி இன்று இணைந்துள்ளார்.
சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று பெல்ஃபாஸ்டில் ஆரம்பமானது.