யாழ்ப்பாணத்தில் சகோதரனுடன்
மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி ஒருவர் விபத்து சிக்கி உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த நேசராசா பானுசா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி பொன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்று விட்டு , சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி வீழ்ந்துள்ளார்.
இதன்போது காயமடைந்தவரை சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.