கசிப்பு வியாபாரி ஒருவரிடம்
ஆறாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற மூன்று பெந்தோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொஸ்கொட பொலிஸாரால் இன்று (17) மாலை கைது செய்யப்பட்டதாக காலி பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் சாரதி ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
இலஞ்சம் வழங்கிய நபர் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பி வைத்ததன் பிரகாரம் கொஸ்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களைக் கைது செய்துள்ளார்.
சந்தேகநபர்கள் மூவரும் நாளை (18) பலபிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.