மனைவியை கொலை செய்த
சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.