புத்தளம் பிரதேசத்தில் 3
கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
3 கோடி ரூபாவுக்கு இந்த கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டன்ர்.
மாவனெல்ல மற்றும் புத்தளம் பிரதேசங்களைச் சேர்ந்த 28, 31 மற்றும் 65 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து கஜமுத்துக்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.