மட்டக்களப்பு, வாகரை, புதூர்
கதிரவெளி பிரதேசத்தில் காணி ஒன்றில் ஒரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறில் அரச நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.