அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனால் ஆறு மாவட்டங்களில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த நிலையி்ல் ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவுக்கமைய குறித்த நிதி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ரிஷாத் பதியுதீனுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்த்து.
பல்வேறு அமைப்புக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அந்தப் பிரதேசங்களின் அவசர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக ரிஷாத் பதியுதீன் கூறினார்.