கடுவெல கொரதொட்ட பகுதியில் 34 வயதான புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயற்பட்டதாக கூறப்படும் கைவாறு முத்து என்பவர் துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமயங்கவின் சகா என அறியப்படும் இவர், அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.