1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டு

சுகாதார நிபுணத்துவப் படையின் பொது மாநாடு நேற்று (18) கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இருபது சுகாதார நிபுணர்கள் மாத்திரமே பங்குபற்றியமையால் மாநாட்டை நடத்த முடியவில்லை.

இதன் காரணமாக கொழும்பில நடைபெறவிருந்த இந்த மாநாட்டை காலை 10.30 மணி வரையில் போதியளவு மக்கள் கலந்து கொள்ளாததால் ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்தார்.

டாக்டர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் உட்பட சுமார் 2,000 சுகாதார வல்லுநர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் 22 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதாரத் துறையின் கூட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அவர் தீர்மானித்த நிலையில், இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிடம் கேட்ட போது, ​​தவிர்க்க முடியாத காரணத்தினால் மாநாட்டை ஒத்திவைக்க நேரிட்டதாக தெரிவித்தார்.

மாநாட்டில் பங்குபற்றய வருகை தந்தவர்களின் எண்ணிக்கை குறைவினால் கூட்டத்தை  நடக்கவில்லை எனவும், மீண்டும் மாநாட்டை நடத்துவதற்கான திகதி குறித்து அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என சுகாதார நிபுணர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி