கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட மஹா இந்துருவ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கொஸ்கொடவில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் லொறியில் வந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்துருவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.