இந்த ஆண்டு ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பங்கேற்புடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ, சர்வ ஜன பலவின் திலித் ஜயவீர, தமிழ் வேட்பாளராகப் போட்டியிடும் அரியேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையில் 7 பிரதான இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சுமார் 200 சமூக ஊடக பக்கங்களில் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக Paffaral அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.