இத்தாலியின் சிசிலி தீவில்
வீசிய சூறாவளியில் 180 அடி உயர சொகுசு படகு ஒன்று மூழ்கியுள்ளது.
இந்தப் படகில் 22 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் பிரித்தானியா, நியூசிலாந்து, அமெரிக்கா இலங்கை, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் அடங்குவர்
மீட்பு நடவடிக்கையில் ஒரு வயது சிறுவன், அவனது தாய், படகின் கெப்டன் உட்பட 15 பேர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கடலோர காவல்படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரித்தானியக் கொடியின் கீழ் பயணித்த படகே இவ்வாறு மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.