1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 
(எச்.எம்.எம்.பர்ஸான்)
 
வேன் விபத்தில் சிறுவன்
மரணித்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த வேன் சாரதி நேற்று (19) வாகரை பொலிஸார் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
 
வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் கடந்த சனிக்கிழமை (17)  அன்று வேன் விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்தார்.
 
ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த எஸ்.மஹ்தி எனும் சிறுவனே இவ் விபத்தில் மரணமடைந்தவராவார்.
 
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் சிறுவன் மரணமடைந்ததுடன், விபத்தை ஏற்படுத்திய வேன் சாரதி வேனுடன் தலைமறைவாகியிருந்தார்.
 
தலைமறைவாகிருந்த சாரதியை கைது செய்ய வாகரை பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில்,மூன்று நாட்களின் பின்னர் வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி