வர்த்தகர் சுரேந்திர வசந்த
பெரேரா அல்லது கிளப் வசந்த கொலைச் சந்தேக நபர்கள் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கடுவெல நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் உட்பட 11 சந்தேக நபர்கள் இன்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்
இதன்போது கடுமையான பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.