ஏறாவூரில் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான தற்போதைய வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி சாகிர் மெளனாவும் கலந்து விசேட உரையாற்றவுள்ளார்.
இதனை ஹாபிஸ் நசீர் அஹமத் தமிழ் லீடருக்கு உறுதிப்படுத்தினார்.
அலி சாகிர் மெளலானா அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவர் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.