1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேர்தல் சட்டங்களை மீறி ஜனாதிபதி

மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று (21) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில்சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க  பல சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியைத் தடுக்க முடியாது என அவர் அங்கு வலியுறுத்தினார்.

தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக செயற்படும் ஜனாதிபதி,  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்றாலும், அவர் நிச்சயமாக தோற்கடிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சின்னம் காரணமாக எரிவாயு வரிசை யுகம் போன்ற பிரச்சினைகளை மக்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துவதாகவும், அப்போது மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்திய அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதியுடன் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி