கொள்ளையடிக்கப்பட்ட பொதுச்
சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிப்பது பழிவாங்கும் நடவடிக்கையல்ல என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவுக்கையில
இந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இதுவரை நாட்டை ஆண்ட ஊழல் குடும்ப வலயத்திலிருந்த அதிகாரத்தை சாதாரண மக்களின் கைகளுக்கு மாற்றும் தேர்தலாகும்.
இந்தத் தேர்தலில் இந்த நாட்டு மக்களுக்கு பெரும் பங்குள்ளது. இன்று கல்கமுவவில் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும்போது, 21 ஆம் திகதி நீங்கள் சரியாகச் செயற்படுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அது நிச்சயம்.
இந்தக் கிராமங்கள் நமக்குப் புதிதல்ல. இந்த கிராமங்களில் உள்ள தாய், தந்தையர், சகோதர, சகோதரிகள் ஒன்றிணைந்து போராடி நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.
எங்களுக்கு ஒரு பெரிய பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நாடு இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய நாடு அல்ல. நமக்குக் கீழே இருந்த பல நாடுகள் நம்மைக் கடந்து சென்றுவிட்டன என்றார.