ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை
அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை முறியடிப்போம் என அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எங்கள் கட்சியை அழிக்க இன்னொரு சதி நடந்துள்ளது. பணத்துக்காகவும் மதுபான அனுமதிக்காகவும் தேசியத்தை அழிக்கும் பெரும் சதி இந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தச் சதியை முறியடிப்போம். நாங்கள்
எமது தந்தை மஹிந்த ராஜபக்ஷ மக்களின் மாபெரும் தலைவர். அவர் இந்நாட்டின் தந்தையானார். ( அப்பச்சி) நாமல் ராஜபக்க்ஷ இந்த நாட்டின் வலிமையான மற்றும் அன்புக்குரிய மகனாக மாறிவிட்டார். உந்த தேசத்தின் மகன் இந்த தேசத்துக்காக ஒரு பெரிய பணியை செய்ய வேண்டும். செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் இலங்கையை இரண்டாவதாக மாற்றும் இந்த பணியை முன்னெடுப்பதற்கு உங்களுக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றார்.