பெந்தர ஆற்றில் நேற்று
(22) மாலை இரண்டு சுற்றுலாப் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஊழியர்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இரவு என்பதால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.