தரமற்ற தடுப்பூசிக் கொள்வனவு
தொடர்பில் கைது செய்யப்பட்ட கெஹலிய உள்ளிட்ட 4 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (22) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடுமையான மன அழுத்தம், இதயநோய் மற்றும் உடல் நலக்குறைவு போன்றவற்றால் தங்கள் தரப்பினர் பாதிக்கப்பட்டிருப்பதால், தேவையான மருத்துவ சிகிச்சைகளை விரைவில் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இது தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் அறிவிக்குமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.