மொனராகலையில் இருந்து
கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று கும்புக்கனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது பஸ்ஸில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் புத்தல மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.