நேற்றுக் (20) காலை வெளிநாடு
சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ, கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவதற்காக விரைவில் நாடு திரும்பவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹொட்டுவ) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கு முன்னரே வெளிநாடு சென்றமை தொடர்பிலேயே நாம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாடு செல்லவிருந்தார். ஆனால், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இறுதித் தருணம் வரை இரவு பகலாக உழைத்தார். அவர் வெளிநாடு செல்வதாக கட்சிக்கு தெரிவித்திருந்தார்.
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அடுத்த பொதுத் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட பசில் ராஜபக்க்ஷ விரைவில் வரவுள்ளார் என தெரிவித்தார்.