காலி மாவட்ட தேர்தல் அதிகாரி
அலுவலகத்தின் தகவலின்படி, மிட்டியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விஹாரையின் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த ஒருவர் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியில் வசிக்கும் 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று காலை வாக்களிப்பு நிலையத்திற்கு வந்து தனது வாக்குச்சீட்டை பெற்று அதில் குறியிட்டு புகைப்படம் எடுத்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.