துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க
விமான நிலையத்தை வந்தடைந்த டான் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று (20) இரவு இவர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வெளிநாட்டு விமானத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு 08.35 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-653 இல் துபாய் செல்லவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கின் 6ஆவது பிரதிவாதியாக டான் பிரியசாத் குறிப்பிடப்பட்டுள்ளார்