அமைதியான முறையில் அதிகார
மாற்றம் ஏற்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கநம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு வழி விடுவார் என நான் நம்புகிறேன்.
அதிகார மாற்றத்தின்போது ஜனாதிபதி ரணில் எந்தவொரு பிரச்சினையையும் உருவாக்குவார் என தாம் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.