2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்
தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்த முகவர்களின் விபரங்களை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.
இறுதி முடிவு வெளியான பின்னர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இதன்படி இன்று (22) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.