இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று
அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நேற்று (21) இடம்பெற்ற வாக்கெடுப்பில் இதுவரை அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளின்படி எந்தவொரு வேட்பாளரும் 50% ஐ தாண்டவில்லை.
இந்நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்தில் உள்ளார். இருப்பினும், இரண்டுக்கும் இடையே 10 சதவீதத்திற்கும் அதிகமான இடைவெளி உள்ளது.
அடுத்த ஜனாதிபதி அநுரவே என்பது தெளிவு - ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ தெரிவிக்கையில், இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படாத போதிலும், அநுரகுமார திஸாநாயக்க அடுத்த ஜனாதிபதி என்பது தற்போது தெளிவாகியுள்ளது. .
அவர் தனது முகநூல் கணக்கின் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.