தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின்
அநுரகுமார திஸாநாயக்க 13 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டுவார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வரம்பைத் தாண்ட முடியாது என்பதால், இரண்டாவது விருப்பத் தேர்வைக் கணக்கிட வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும், எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.