இரத்தினபுரி சீவாலி மத்திய
மகாவித்தியாலயத்தில பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்திலிருந்த ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி புதிய நகரம் ஸ்ரீ சுமனகமவைச் சேர்ந்த 68 வயதுடைய வை. ஏ. வன்னியாராச்சி என்ற நபர்.
குறித்த நபர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான செயற்பாட்டாளர் எனவும், இரத்தினபுரி சீவலி மத்திய மகாவித்தியாலயத்திம் ஓராம் இலக்க மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் கடமையிலிருந்த போதே இந்த மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (21) காலை 8 மணியளவில் உயிரிழந்தவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், அதனையடுத்து அவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.