எதிர்வரும் பொதுத் தேர்தலில்
பிரதமர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்புச் சபையில் பிரதமர் பதவிக்கு இவரைப் பரிந்துரைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
தலதா அத்துக்கோரள ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.