குறித்த காலத்துக்கு முன்னரே
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓய்வூதியத்தை இழந்த 85 எம்.பி.க்களில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்களும் அடங்குகின்றனர்.
பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்த ஓய்வூதியம் 45,000 ரூபாவாகும்.