(இறக்காமம் மேலதிக நிருபர்)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்
நியமனம் பெற்ற கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (26) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க உள்ளிட்ட கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.