கட்டுநாயக்க விமான நிலைய
வரலாற்றில் மிகப் பெரிய 'குஷ்' வகை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
44 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க கஞ்சாவை கொண்டு வந்த பிரித்தானிய பயணி ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டதாக. கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் 21 வயதான பிரிட்டிஷ் தேசிய பாதுகாப்பு சேவை அதிகாரியாவார்
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து இன்று காலை 9.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தை விட்டு பிரகடனம் செய்வதற்கு ஏதுமில்லாத "கிரீன் சேனல்" ஊடாக வந்த இவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது 43 கிலோ 648 கிராம் எடையுள்ள இரண்டு பொதிகளில் காணப்பட்ட "குஷ்" கஞ்சாவை கண்டுபிடித்து கைப்பற்றினர்.