ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு உள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் பின்னர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.