ஜனாதிபதி மாளிகைக்கு
அருகிலுள்ள சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மாத்திரமே இவ்வீதிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.