வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா
எனப்படும் கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 13 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கடுவெல நீதிவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜர்படுத்திய போதே நீதிவான் சனிமா விஜயபண்டார இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.