அரசியல் நோக்கங்களுக்காக
சட்டவிரோதமாக மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக உள்ளகத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையானது ஏற்கனவே இந்த அதிகாரி சம்பந்தப்பட்ட பல மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்தியுள்ளது.
மேலும், கலால் சட்டத்தை மீறி மதுபானங்களுக்கு உரிமம் வழங்கியதாக மதுக்கடை உரிமையாளர்கள் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த அதிகாரி தனது விருப்பப்படி வரம்பற்ற உரிமங்களை வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றதாகவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.