முன்னாள் ஜனாதிபதிகளான
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்க்ஷ, கோட்டாபய ராஜபக்க்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின மனைவி திருமதி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இவரகளின் பராமரிப்புக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாவாகும்.
2023-ம் ஆண்டு எட்டு கோடிக்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு 11 கோடிக்கும் அதிகமாகவும் செலவுகள் உயர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 45 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.