(ஏ. எச்.சித்தீக் காரியப்பர்)
அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமை ஆகியவற்றிலிருத்து தான் உடனடியாக விலகிக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தமிழ் லீடருக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் எமக்கு தெரிவிக்கையில், தன்னால் முன்வைக்கப்பட்ட நல்ல பல யோசனைகளை கட்சித் தலைவர் உடனடியாக நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் கட்சியில் தொடர்ந்து நான் பயணிப்பதில் அர்த்தமில்லை.
எனது இந்த தீர்மானத்துக்கு கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீன் மட்டுமே காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்