தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை
மீண்டும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று (30) தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னதாக வெளியான பரீட்சையின் முதல் தாளின் மூன்று வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்