இஸ்ரேலில் விவசாயத் துறையில்
பணியாற்றிய இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இவர் ஆறு மாதங்களுக்கு முன் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.