எதிர்வரும் பாராளுமன்ற
தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முஸ்னத் முபாரக் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, திகாமடுல்ல, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கூட்டணியாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாகவும் போட்டியிடவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்டுப்பணத்தை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.