தற்போது கிழக்கு மாகாணத்துக்குப்
பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,நிதி மோசடிப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்று அம்பாவில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.